பள்ளி குழந்தைகள் சிந்திக்க தினம் ஒரு வாசகம் ...

 
சிந்திக்க தினம் ஒரு வாசகம் ...

§   வீரம் என்றால் வாழ்வு பயம் என்றால் மரணம் -விவேகானந்தர்.
§ புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள் - சேகுவேரா.
§  விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை - நற்சிந்தனைகளை குழந்தைகள் உள்ளத்தில் விதைப்போம் - நம்மாழ்வார்,
§  ஒருவனுக்கு மீனைக் கொடு; அவனுக்கு நீ ஒரு நாள் மட்டுமே உணவளித்தவனாவாய். அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடு; அவனுக்கு நீ அவனது வாழ்நாள் முழுக்க உணவளித்தவனாவாய் -லாவோட்சு.
§  எண்ணங்களை நல்லெண்ணங்களாக மாற்றிப் பயிரிடுங்கள்; அது வெற்றியை அறுவடை செய்யும் - வில்லியம் ஜேம்ஸ்.
§  ஒழுக்கம் உள்ளவனாகவும், நல்லவனாகவும் உள்ளவன் வேறு எதைப்பற்றியும் கவலையோ, அச்சமோ கொள்ளத் தேவையில்லை - கன்பூசியஸ்.
§  நீங்கள் பேசுவதன் மூலமே பேசவும், படிப்பதன் மூலம் படிக்கவும், ஓடுவதன் மூலமே ஒடவும் கற்றுக் கொள்கின்றீர்கள். அதே போல் அன்பு செய்வதன் மூலமே அன்பு செய்யவும் கற்றுக்கொள்ளுங்கள் - அனடோல் பிரான்ஸ்.
§  சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை, துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை - அப்துல் கலாம்.
§  மகிழ்ச்சி என்பது அன்பு, கருணை மற்றும் நன்றியோடு ஒவ்வொரு நிமிடமும் வாழும் ஆன்மிக அனுபவம்- டெனிஸ் வைட்லி
§  யாரை நீ வெறுத்தாலும் உன்னை மட்டுமாவது நேசிக்க கற்றுக்கொள் ஏனெனில் இந்த உலகிலே மிக மிக சிறந்த காதல் உன்னை நீ நேசிப்பது தான்.
§  வாழ்க்கையில் எதிரிகளே இல்லாமல் இருப்பவன் வாழ்க்கையை முழுவதுமாக வாழவில்லை என்றுதான் அர்த்தம் - சேகுவேரா.
§  அசாதாரணமான வாய்ப்புகளுக்காகக் காத்திருக்க வேண்டாம்; பொதுவான சந்தர்ப்பங்களை கைப்பற்றி, அவற்றை சிறந்ததாக மாற்றுங்கள் - ஒரிசன் ஸ்வெட் மார்டம்.
§  நீ செல்லும் பாதையில் தடைகள் எதுவும் இல்லையென்றால் அது நீ போகும் பதையே அல்ல வேறு யாரோ போன பாதை - பிடல் காஸ்ட்ரோ.
§  அறிவுடைய மேன்மக்கள் செய்யும் செயல்கள் எப்போதும் உயர்வுடையதாகவே இருக்கும். அவர்கள் வறுமை நிலையில் இருந்தாலும் இதில் இருந்து இம்மி அளவிலும் மாறமாட்டார்கள் - மகாவீரர்.
§  பயனுள்ள சொற்களைப் பேசுபவன் வாசமுள்ள மலருக்கு ஒப்பாவான் - கௌதம புத்தர்.
§  உண்மையில் வாழ்க்கை மிகவும் எளிதானது, ஆனால் நாம் வலியுறுத்தி அதனை சிக்கலானதாக மாற்றுகின்றோம் - கன்பூசியஸ்.
§  வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவனுக்குத் தன்னம்பிக்கை வேண்டும்; வாழ்க்கை முழுமை  பெறக் கடவுள் நம்பிக்கை வேண்டும் - ஜான் கீட்ஸ்.
§  எப்படி வேண்டுமானாலும் பணத்தை சம்பாதித்து விடலாம் ஆனால் அதை ஒரு அறிவாளியால் தான் காப்பாற்ற முடியும் - மகாத்மா காந்தியடிகள்.
§  அசைக்கமுடியாத நம்பிக்கையும், திட சித்தமும் கொண்ட மனிதனே உலகை தன் வழியில் தானே உருவாக்கிக் கொள்கிறான் - கதே.
§  எத்தனை துன்பங்கள் பகைவர்களால் வந்தாலும், அதை அன்பாலேயே வென்று விடுங்கள் - மகாத்மா காந்தியடிகள்.
§  அடைவதற்கு ஆசைப்படுகிறவன் இழப்பதற்கு தயாராய் இருக்க வேண்டும் - கண்ணதாசன்.
§  இவ்வுலக வாழ்க்கையில் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிகமிக உயர்ந்தது பொறுமை - சுப்பிரமணிய பாரதியார்.
§  வேலை செய்யாவிட்டால் நாட்களும் புனிதமாகாது, வாழ்க்கையும் புனிதமாகாது - ஜான் ரஸ்கின்.
§  தங்களுக்குத் தேவையான சந்தர்ப்பங்களைத் தேடித் பெறுபவர்தான் வாழ்வில் முன்னேற்றம் காண்கிறார் - ஜார்ஜ் பெர்னாட் ஷா.
§  எதிர்காலத்தைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பது நிகழ்காலத்தையும் கெடுத்துவிடும், எதிர்காலத்தையும் கெடுத்துவிடும் - சுவாமி.
§  மோசமான விமர்சனங்கள் எவ்வித அர்த்தத்தையும் கொண்டிருப்பதில்லை. அவற்றின் நோக்கம் அறிவுரை வழங்குவதோ அல்லது உதவி செய்வதோ அல்ல, இழிவுபடுத்துவதே அதன் நோக்கம் - பார்பரா ஷெர்.
§  உங்கள் செயல்களுக்கு விளக்கம் அளிக்காதீர்கள், ஏனென்றால் உங்கள் நண்பர்களுக்கு அது தேவையில்லை மற்றும் உங்கள் எதிரிகள் அதை நம்பப்போவதில்லை- எல்பர்ட் ஹப்பர்.
§  தாமரை இலை மீது தண்ணீர் போலவும், ஊசி முனை மீது கடுகு போலவும் இன்பங்களில் ஒட்டிக்கொள்ளாமல் எவன் இருக்கிறானோ அவனே உயர்ந்தவன் -
கௌதம புத்தர்.  
§  படித்தால் வாழ்க்கையை மாற்ற முடிகிறதோ இல்லையோ, உங்களின் வாழ்க்கை பற்றிய பார்வையை மாற்றலாம்.
§  உலகத்தை மாற்ற நீங்கள் பயன்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்த ஆயுதம், கல்வி.
§  உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக நீங்கள் இருக்க வேண்டும். 
§  உன்னால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், எந்த தவறும் இல்லாமல் உன்னால் அதை நிச்சயம் செய்ய முடியும். 
§  நம்மால் நேற்றை சரி செய்ய முடியாது ஆனால் நாளையை சிறப்பாக உருவாக்க முடியும்.
§  வாழ்க்கையில் வெற்றி பெற, உனது வேலையை விருப்பத்துடன் செய்ய வேண்டும். அப்போதுதான் உன்னால் மிகப்பெரிய இடத்தை அடைய முடியும்.
§  உங்களது எதிர்காலத்தை உடனடியாக மாற்ற முடியாது, ஆனால் உங்களது பழக்கங்களை மாற்றலாம். அந்த பழக்கங்கள் உங்கள் எதிர்காலத்தை மாற்றும்.
§  வருங்காலத்தைப் பற்றிய கவலை வேண்டாம். நிகழ்காலத்தில் சிறப்பாய் செயல்பாட்டால் வருங்காலம் தன்னால் மாறும்.
§  எல்லோரும் பயணிக்கிறார்கள் என்பதற்காக பின் தொடராதே. உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு. 
§  வெற்றி என்பது இறுதியானதும் அல்ல, தோல்வி என்பது முடிவும் அல்ல.
§  வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம்தான். கடமையை செய்தால் வெற்றி, கடமைக்கு செய்தால் தோல்வி. 
§  நீங்கள் வெற்றியடைவது பற்றி கனவு காணாதீர்கள், அதற்காக உழையுங்கள்.
§  சில சமயம் வெற்றி பெறுவது கூட எளிதுதான். ஆனால் அதைத் தொடர்ந்து தக்க வைப்பதுதான் மிகக் கடினம்.
§  உனது தோல்விக்கான காரணத்தைத் தேடுவதை நிறுத்திவிட்டு, உன் வெற்றிக்குத் தேவையான விஷயங்களைக் கண்டறிய முற்படு.
§  இதுவரை ஒருவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்றால், அவர் புதிதாக எதையும் முயற்சிக்கவில்லை என அர்த்தம். 
§  பணம் சம்பாதியுங்கள், பொருளீட்டுங்கள், நலமாய் வாழுங்கள், ஆனால் அதற்காக எப்போதும் உங்களை மன அழுத்தத்தினால் அழித்துக் கொள்ளாதீர்கள்.
§  எவ்வளவு பெரிய கணக்காக இருந்தாலும் அதற்கு தீர்வு காண வழி இருக்கும்போது, உனது பிரச்சனைக்கான தீர்வுக்கும் ஏதேனும் வழி இருக்கும். 
§  பள்ளிகளில் மாணவர்கள் படிப்பதைக் காட்டிலும், கற்றுக் கொள்வதே முக்கியம். படிக்க புத்தகங்களும் கற்றுக் கொள்ள நல்ல ஆசிரியர்களும் தேவை –  மகாத்மா பூலே
§  நம் கல்வி உருவாக்க வேண்டியது, அஞ்சி ஒளியும் பிரஜையை அல்ல...
§  வலிமை, சுயகட்டுப்பாடு, ஆளுமை, தலைமைப்பண்பு மிக்க இளைஞர்களை... டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் 
§  உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா? பிரச்சினைகள் வரும்போது அல்ல, பிரச்சனைகளை கண்டு நீங்கள் பயந்து விலகும்போது - மகாகவி பாரதியார்
§  எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுன்றனவோ, அங்கே விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் - சே குவேரா
§  உலகின் மாபெரும் கண்டுபிடிப்பாளர்கள், தலை சிறந்த மாமேதைகள் என சாதனையாளர்களை இணைக்கும் ஒரு விஷயம் இருக்குமானால், அது இளம்பருவத்தில் அவர்கள் அனுபவித்த சுதந்திர தேடல்கள் தான்....
§  உறுதியான காரணங்களே உறுதியான செயல்களை உருவாக்குகின்றன – சேக்ஸ்பியர் 
§  வாழ்க்கையில் கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு.. அவர்களுக்கு அவமானம் தெரியாது... விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடப்பார்கள்...
§  புத்தகங்கள் இல்லையென்றால் சரித்திரம் மௌனமாகிவிடும். இலக்கியம் ஊமையாகிப்போகும். புத்தகம் என்பது மனித குலமே அச்சு வடிவில் இருப்பது போல.
§  விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம். இல்லையேல் உரம் - சே குவேரா
§  விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை... சேகுவேரா
§  வெற்றிக் கதைகளைப் படிக்க வேண்டாம், அதிலிருந்து ஒரே ஒரு செய்தியை மட்டுமே பெறுவீர்கள், தோல்வி கதைகளைப் படியுங்கள், அது வெற்றி பெறுவதற்கான உதவிக்குறிப்புகளைத் தரும் டாக்டர் அப்துல் கலாம்
§  கனவு காணுங்கள். ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல உன்னைத் துாங்க விடாமல் பண்ணுவது ஏதுவோ அதுவே (இலட்சிய) கனவு - டாக்டர் அப்துல் கலாம்
§  நீங்கள் வகுப்பில் ஒரு மாணவருக்கு அறிவியல் போதிக்கும் ஆசிரியர் என்றால் உங்களுக்கு அறிவியல் மட்டும் தெரிந்தால் போதாது. அம்மாணவர் பற்றியும் தெரிந்திருத்தல் அவசியம் - பேராசிரியர் யஷ்பால்.
§  நீ மண்ணுக்காக போராட தயங்குகிறாய்.. ஆனால், ஒவ்வொரு விதையும் மண்ணோடு போராடியே மரமாகிறது..!  - சேகுவேரா
§  சிந்திக்காமல் படித்தால் அந்தப் படிப்பு வீண், படிக்காமல் சிந்தித்தால் அந்த வாழ்க்கையே வீண்.
§  புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள். சேகுவேரா
§  ஒருவரின் காலடியில் வாழ்வதை விட.. எழுந்து நின்று உயிரை விடுவது எவ்வளவோ மேல் சேகுவேரா
§  நான் தோற்றுப்போகலாம் அதன் பொருள் வெற்றி சாத்தியமற்றது என்பதல்ல - சேகுவேரா
நம் பள்ளி வாயிலில் தினம் ஒரு வாசகத்தை எழுதி, அதை தினமும் மாணவர்கள் வாசிக்க பழக்குவோம்... மனதில் நல்ல சிந்தனைகளை விதைக்கும் ...
          த. ஐயப்பன், முதுநிலை விரிவுரையாளர், DIET, கீழ்பென்னாத்தூர்
 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேர்விற்கு மாணவர்கள் தயாராவது எப்படி?

கற்றல் வகைகள், நிலைகள் மற்றும் அணுகுமுறைகள்